Menus

நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே

நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே
நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே
அணையாத தீபமே இயேசுவே இயேசுவே 

ஒளிகொண்டு தேடினால் இருள் நில்லுமோ
உன்துணையில் வாழ்க்கையில் துயர்வெல்லுமோ-2
தடைகோடி வரலாம் உள்ளம் தவித்தோடி விடலாம் -2
ஆனாலும் உன் வார்த்தை உண்டு - எது
போனாலும் உனில் தஞ்சம் உண்டு
இயேசுவே இயேசுவே - 2

இரவுக்கும் எல்லை ஓர் விடியல் அன்றோ
முடிவாக வெல்வதும் நன்மையன்றோ-2
தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம் - 2
என்றென்றும் உன் ஆசி கொண்டு - வரும்
நல்வாழ்வை கண்முன்னே கண்டு
இயேசுவே இயேசுவே -2

Ennai maravathavare Lyrics


என்னை மறவாதவரே
என்னில் நினைவானவரே
உம்மை நான் நம்புவேனைய்யா
நேசர் இயேசய்யா
உயிருள்ள நாளெல்லாம்
நான் நம்புவேனைய்யா

1. தாயானவள் தன் பாலனை
மறந்தாலும் நான் மறவேனே
உன்னை எந்தன் உள்ளங்கையில்
வரைந்து வைத்தேனே
உன்னை மறவாமல் எந்நாளும்
நினைத்திடுவேனே

2. இமைப்பொழுது எந்தன் முகத்தை
மறைத்தாலும் உனக்கு இரங்குவேன்
மலைகள் விலகி பர்வதங்கள்
நிலைபெயர்ந்தாலும்
எந்தன் சமாதானம் உன்னைவிட்டு
விலகிவிடாது

3. உன் தாய் உன்னை தேற்றிடும் போல
நான் உன்னை தேற்றிடுவேனே
தண்ணீரைக் கடக்கும் போதும்
உன்னுடன் இருப்பேன்
அக்கினியில் நடக்கும் போதும்
கூடவே நடப்பேன்

Engal devan vallavare lyrics


எங்கள் தேவன் வல்லவரே
இன்றும் என்றும் காப்பவரே
வல்லவர் சர்வ வல்லவர்
நல்லவர் என்றும் நல்லவர் அல்லேலூயா
தீயின் நடுவே நடந்தாலும்
எரிந்து போகமாட்டோம்
கடலின் நடுவே நடந்தாலும்
மூழ்கிப் போகமாட்டோம்
சோதனை துன்பம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போவதில்லை
வேதனை வியாதி நெருக்கினாலும்
வெற்றி சிலுவையுண்டு
அலகை அனுதினம் தாக்கினாலும்
ஆண்டவர் வார்த்தையுண்டு
உலகம் நம்மை வெறுத்தாலும்
உன்னதர் கரங்களுண்டு


Inba Yesu rajavai naan paarthal pothum Lyrics


இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் -2
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும்

இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு
கறை திரை அற்ற பரிசுத்தரோடு
ஏழை நான் பொன் வீதியில் உலாவிடுவேன் -2

தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது
அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்

முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன்
வாரினால் அடிப்பட்ட மூதுகைப் பார்த்து
ஒவ்வொரு காயங்களாய் முத்தம் செய்வேன்

என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா

ஆஹா! எக்காளம் என்று முழங்கிடுமோ
ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ
அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமே




Inba Yesu rajavai naan paarthal pothum
Magimaiyil avarodu naan vaalthal pothum -- (2)
Nithyamam mochavittil sernthal pothum -- (2)
Alleluiah kutathil naan magilthal pothum -- (2) -- Inba Yesu

Yesuvin rathathale mitkepattu
Vasanamaam velliyale kakepattu -- (2)
Karai thirai attre parisutharodu -- (2)
Elleyan kunvithiyil ullaviduven -- (2) -- Inba Yesu

Thutargal veenaigallai mitumpothu
Niraivaane jeyakosham mulangumpothu -- (2)
Alleluiah geetham paadi kondu -- (2)
Anbaram yesuvodu aagamagilven -- (2) -- Inba Yesu

Mulkridam suttapatta thallayai patthen
Porkridam suttinanum pugalthiduven -- (2)
Vaarinal adipatte muthugai paartu -- (2)
Ove Oru kayangalai mutham seyven -- (2) -- Inba Yesu

En ullam nandriyal nerainthiduthe
Enthanin bakyavettai ninaikayille -- (2)
Alleluiah Amen Alleluiah -- (2)
Varnike enthan naavu pothathaiya -- (2) -- Inba Yesu


Sornthu Pogathae Maname


சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே (போராட)
கண்டுன்னை அழைத்த தேவன் கைவிடுவாரோ

வாக்களித்த தேவனை நீ
பாடிக் கொண்டாடு
ஊக்கமான ஆவி உன்னை
தாங்க மன்றாடு
துன்பங்கள் தொல்லைகள் உன்னை
சூழ்ந்து கொண்டாலும்
அன்பர் உன்னை தேற்றும் நேரம்
ஆனந்தமல்லோ
சோதனைகளை சகிப்போன்
பாக்கியவானல்லோ
ஜீவ கிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம்


Geetham Geetham Jaya Jaya Geetham lyrics



கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்கைகொட்டிப் பாடிடுவோம்
இயேசு ராஜன் உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் கீதம்

1.
 பார் அதோ கல்லறை மீடின பெருங்கல்    புரண்டுருண்டோடுதுபார்அங்கு    போட்ட முத்திரை காவல் நிற்குமோதேவ    புத்திரர் சந்நிதி முன்  கீதம்

2. 
வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
   
ஓடி உரைத்திடுங்கள்தாம்
   
கூறின மாமறை விட்டனர் கல்லறை
   
போங்கள் கலிலேயாவுக்கு  கீதம்

3. 
அன்னா காய்பா ஆரியர் சங்கம்
   
அதிரடி கொள்ளுகின்றார்இன்னா
   
பூத கணங்கள் இடி ஒலி கண்டு
   
பயந்து நடுங்குகின்றார்

4. 
வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம்
   
வருகிறார் ஜெயவீரன்நம்
   
மேள வாத்தியம் கை மணி பூரிகை
   
எடுத்து முழங்கிடுவோம


Sornthu pogathe maname சோர்ந்து போகாதே மனமே

சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே (போராட)
கண்டுன்னை அழைத்த தேவன் கைவிடுவாரோ
வாக்களித்த தேவனை நீ
பாடிக் கொண்டாடு
ஊக்கமான ஆவி உன்னை
தாங்க மன்றாடு
துன்பங்கள் தொல்லைகள் உன்னை
சூழ்ந்து கொண்டாலும்
அன்பர் உன்னை தேற்றும் நேரம்
ஆனந்தமல்லோ
சோதனைகளை சகிப்போன்
பாக்கியவானல்லோ
ஜீவ கிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம்